Saturday, December 5, 2015

180 பேரை தன் வீட்டில் தங்க வைத்த அஜித்!

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே ஆங்காங்கே இருக்கும் மக்கள் தங்களால் முடிந்த உணவுகளயும், பண் மற்றும் பல உணவுப்பொருட்களை சென்னைக்கும் அதன் சுற்றியுள்ள பகுதிக்கும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களு,ம் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ரஜினி மற்றும் விஜய் தங்களின் கல்யாண மண்டபங்களை மக்களுக்காக திறந்து வைத்துள்ளனர். மேலும் இளையதளபதி விஜய் அவர்கள் 5 கோடிக்கு மதிப்பிளான பொருட்களை வழங்கிவருவதாக செய்திகள் வெளிவந்தன.

தற்போது தல அஜித் இதுவரை தன் வீட்டில் 180 பேர் தங்கவைத்து போர்வைகளும் உணவயும் அவரே அளிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் மக்கள் தங்குவதற்கு அவரே அழைப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.



வெளியாட்கள் யாரையும் தன் வீட்டிற்கு அனுமதிக்காத நடிகர்கள் மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜித் அவர்களின் ரசிகர்கள் வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment