Saturday, December 5, 2015

சென்னையில் படகு மூலம் நடமாடும் ஏடிஎம் இயந்திரம்: நிதியமைச்சகம் உத்தரவு

 சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் பொது மற்றும் தனியார் வங்கி பிரதிநிதிகளின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னையில் பல்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படுத்தவில்லை. சில வங்கிகள் சரியாக செயல்படாமல் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வங்கிகளின் நேரத்தை நீட்டிக்க அனைத்து வங்கிகளுக்கும் பரிந்திரைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment