Friday, December 4, 2015

வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட ரமணன்!!!!

சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணனை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருக்கும் எஸ்.ஆர்.ரமணனின் வீடு, தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது.

அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தியாகராய நகர் பகுதியில் புதன்கிழமை வெள்ளம் சூழந்தது. இதில் ரமணனும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து உடனே ரமணன், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு உதவி கோர அவர்கள் விரைந்து வந்து ரமணன் குடும்பத்தினரையும் அந்த குடியிருப்பில் இருந்த பிற குடும்பங்களையும் மீட்டுச் சென்றுள்ளனர். இந்த விஷயம் இப்போது தான் வெளியில் வருகிறது.

0 comments:

Post a Comment