Friday, December 4, 2015

5 கோடி நிவாரண நிதியுடன் காத்திருக்கும் விஜய்!

சென்னையை உலுக்கி எடுத்த கனமழையால் தலைநகரம் சென்னை தற்போது வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதல் அண்டை மாநிலங்கள் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் சென்னையில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் 5 கோடி மதிப்பிலான உணவு மற்றும் மக்களின் அர்த்தியாவசியான பொருட்களுடன் இருப்பதாகவும் மக்களை அங்கே வந்து தங்குமாறு விஜய் ரசிகர்கள் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷோபா கல்யாண மண்டபம் என்றும் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment