Wednesday, December 16, 2015

இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்துள்ளது- இளையராஜா நெகிழ்ச்சி!

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாதிக்கபட்டவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ( பெப்சி ) சார்பில் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நனடைபெற்றது .

இந்த விழாவில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார் இசைஞானி இளையராஜா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது "இந்த மேடை விளம்பரத்திற்கான மேடை அல்ல , கொடுப்பவர்களின் கரங்களும் வாங்குபவர்களின் கரங்களும் ஒரே மாதிரியாக உள்ளது நாம் எங்கேயோ எதுவோ தவறு செய்திருக்கிறோம்.

இறைவன் நினைத்திருந்தால் சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம் .ஆனால், ஐம்பூதங்களில் ஒன்றான நீர் மூலம் கஷ்டப்படுத்தி இருக்கிறான். இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்திருக்கிறது.

இது நாள் வரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என தெரியாமல் வாழ்ந்த சூழலில் இப்போது அந்த வீட்லயும் நிறைய பேர் சாப்டாம இருக்காங்க அவங்களுக்கும் கொண்டு போய் கொடுங்கன்னு மக்கள் கூறுகிறார்கள்" எனக்கூறினார்.

0 comments:

Post a Comment