
அந்த வகையில், இந்த பிச்சைக்காரன் படத்திலும் விஜய் ஆண்டனியை சீரியஸ் நாயகனாகவே பார்க்கலாம் என்கிறார்கள். ஒரு இளைஞன் பிச்சைக்காரன் கெட்டப்பில் சமூக விரோதிகளை எப்படி களையெடுக்கிறார் என்பதுதான் இந்த படமாம். தற்போது அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து விட்ட இப்படத்தை, டிசம்பர் மாதம் இறுதியில் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிச்சைக்காரன் படத்தில் நடித்து வந்தபோதே, சைத்தான் படத்திலும் நடித்து வந்த விஜய் ஆண்டனி, இப்போது அந்த படத்தையும் முடித்து விட்டார். இன்னும் பத்து நாட்கள்தான் படப்பிடிப்பு நடக்க வேண்டி யுள்ளதாம். அதனால் பிச்சைக்காரன் திரைக்கு வந்து இரண்டு மாதங்களிலேயே சைத்தான் படமும் திரைக்கு வந்து விடுமாம். மேலும், சைத்தான் படப்பிடிப்பு முடிந்ததும் திருடன் படவேலைகளிலும் இறங்குகிறாராம் விஜய் ஆண்டனி. அந்த படத்திலும் அவருக்கு மிக சீரியசான வேடம்தானாம். ஆக, இப்போது நடித்துள்ள பிச்சைக்காரன் மற்றும் சைத்தான், திருடன் ஆகிய மூன்று படங்களிலுமே விஜய் ஆண்டனிக்கு படு சீரியசான வேடங்கள்தானாம்.
0 comments:
Post a Comment