Sunday, December 6, 2015

இப்படி பண்றீங்களேம்மா.. அதிமுகவினருக்கு கொஞ்சமும் சளைக்காத விஜய் ரசிகர்கள்!

அந்த அதிமுகக்காரர்கள்தான், அம்மா ஸ்டிக்கர் ஓட்டினால்தான் நிவாரண பொருள் வழங்கவிடுவோம் என்று தகராறு செய்கிறார்கள் என்று பார்த்தால், இங்கு ஒரு நடிகரின் ரசிகர் மன்றமும், ஸ்டிக்கர் ஒட்டி நேரத்தை விரையம் செய்துகொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.


இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் செய்யப்படுவது தர்மம் என்பார்கள். ஆனால், ஒரு டியூப் லைட்டை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, அந்த லைட்டில் வெளிச்சம் வெளியே தெரியாத அளவுக்கு கொட்டை எழுத்தில் தனது பெயரை பொறித்து வைக்கும், அற்ப சமூகத்தில்தான் நாம் வாழ்த்து வருகிறோம்.

ஆனால், அவசர நேரத்தில், இந்த வெத்து விளம்பரங்களுக்காக காலத்தை விரையம் செய்யாமல், உயிர் காக்கும் பணியில் இறங்க வேண்டியது மனிதாபிமானம் உள்ள மனிதர்களின் முதல் கடமை. ஆனால், கடலூர் உள்ளிட்ட வெள்ள பாதிப்புள்ள பகுதிகளுக்கு தன்னார்வலர்களால் அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை ஒட்ட வேண்டும் என்று, அதிமுகவினர் கலாட்டா செய்ததாக புகார் வந்தது.

இதையடுத்து, குற்றவாளிகள் குறித்து தகவல் தருமாறு, அதிமுக தலைமை கழகம் வேண்டிக்கொண்டுள்ளது. அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல, நடிகர் ஒருவரின் படத்தை, தண்ணீர் பாட்டிலில் ஒட்டியபடி வினியோகம் நடந்துவருகிறதாம். இதை பெருமையாக ஷேர் செய்துள்ளனர் டிவிட்டரில். ஏம்ப்பா, உயிருக்கு போராடுறவனுக்கு தண்ணி கூட கொடுக்காம, ஸ்டிக்கர் ஒட்டி நேரத்தை வீண் செய்யனுமா?

என்னம்மா நீங்களும் இப்படி பண்றீங்களேம்மா..

0 comments:

Post a Comment