Monday, December 7, 2015

தந்தை ஓ.பி.எஸ் 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறாரே..!

தந்தை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் படத்தை சட்டைப்பையில் வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் கட்-அவுட் வைத்து நிவாரண உதவி செய்கிறாராம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் நிவாரண உதவி பொருட்களில் முதல்வர் படத்தை ஒட்ட வேண்டும் என்று அதிமுகவினர் கலாட்டா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கலாட்டா செய்வோர் பற்றி புகார் தெரிவிக்க, 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய தொலைபேசி எண்களிலும், info@aiadmk.com என்ற இ-மெயில் முகவரியிலும், @aiadmkofficial என்ற டிவிட்டர் அக்கவுண்டிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது.

பொதுமக்களிடம் பிரச்சினை செய்ததாக இதுவரை, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கல் கூறுகின்றன.

இந்நிலையில், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயலலிதா கட்-அவுட்டை நிறுவி, அதன் அருகே நின்று நிவாரணம் கொடுக்கும் படம் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது. தந்தை, ஓ.பி.எஸ் சட்டைப் பையில் ஜெயலலிதா போட்டோ வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒருபடி மேலே போய்விட்டார் என்கிறார்கள் வலைவாசிகள்.

0 comments:

Post a Comment