Monday, December 7, 2015

எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்ததா ?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகம் வெளிவரும் என்று அப்போதே ஷங்கர் கூறி இருந்தார் .

இந்நிலையில் எந்திரன் 2 வை கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம் 300 கோடி ரூபாயில் செல்வவில் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் மிக பெரியஅளவில் ஏவிம்-மில் எந்திரன்2 படத்தொடக்கவிழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம்.

சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளப் பாதிப்புகள் காரணமாக அந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்புநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டு அலுவலகத்தில் பூஜை போட்டு மிக எளிமையாக நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களாம்.

இன்று பூஜை அதைத் தொடர்ந்து பதினான்காம்தேதி முதல் படப்பிடிப்பு என்று திட்டமிட்டிருந்தார்களாம். இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் கடந்த பல நாட்களாகவே நடந்துவருகிறது. மழை நிலவரத்தையொட்டி பதினான்காம்தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜனவரி தொடக்கத்தில் அல்லது பொங்கல் கழித்து, ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment